13 வயது சிறுமி 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

12848பார்த்தது
13 வயது சிறுமி ஒருவர் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை (ஜூன்18) 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஆனால், காலையில் பள்ளிக்கு செல்வதற்காக வெளியே சென்ற சிறுமி பள்ளி பேருந்து வராததால் மீண்டும் வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர், கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார். வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இது தற்கொலை என போலீசார் உறுதி செய்தனர். இந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை.

நன்றி வீடியோ: Free Press MP

தொடர்புடைய செய்தி