ஆற்றில் சிக்கியவர்கள் மீட்பு - அரசுக்கு கோரிக்கை

58பார்த்தது
கொடைக்கானல் அருகே கல்லாறு ஆற்றைக் கடக்க முயன்ற 5 பேர் இன்று (மே 22) வெள்ளத்தில் சிக்கினர். பெரியகுளத்திற்குச் சென்று வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். பின்னர்,“பாலம் கட்டிக்கொடுக்க சொல்லி பல வருஷமா கோரிக்கை வைக்கிறோம். அரசாங்கம் அதை செஞ்சு கொடுத்தாதான் நாங்க வாழ முடியும்” என பாதிக்கப்பட்டவர்கள் வேதனையோடு கோரிக்கை வைத்துச் சென்றனர். நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி