ஈரோட்டை விட்டு வைக்காத வெயில்

70பார்த்தது
ஈரோட்டை விட்டு வைக்காத வெயில்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது மழை பெய்து மக்களை குளிர வைத்து வருகிறது. இருந்தபோதிலும், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இன்று (மே 22) வெயில் வாட்டி வதைத்து உள்ளது. அதன் படி, ஈரோட்டில் அதிகபட்சமாக 100° F வெயில் கொளுத்தியுள்ளது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து உள்ளனர்.

தொடர்புடைய செய்தி