முகத்தை மூடி திருட்டு.. சிசிடிவியில் சிக்கிய 5 பெண்கள்

83பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் சந்தீப் வீட்டிற்குள் பட்டப்பகலில் புகுந்த 5 பெண்கள் வீட்டில் இருந்த பொருட்களை திருடியுள்ளனர். முகத்தை மறைத்துக்கொண்டு திருட்டில் ஈடுபட்ட பெண்கள் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இந்த திருட்டு சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி திருடர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி