அயோத்தியில் நிலத்தின் விலை 20 மடங்கு உயர்வு

568பார்த்தது
அயோத்தியில் நிலத்தின் விலை 20 மடங்கு உயர்வு
அயோத்தியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிலத்தின் விலை 20 மடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளது. அயோத்தியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சதுர அடி ரூ.1,000க்குக் கிடைத்த நிலம் இன்று சதுர அடி ரூ.12,000க்குக் கூடக் கிடைக்கவில்லை. மிகப்பெரிய பில்டிங் டெவலப்பர்களும், ஹோட்டல் நிறுவனங்களும் போட்டி போட்டு நிலங்களை வாங்கி வருகின்றன. ராமர் கோயில், சர்வதேச விமான நிலையம் போன்ற பெரிய திட்டங்கள் வருவதால், நிலத்தின் விலை மேலும் உயரும் என தொழில்துறை துறையினர் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி