ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

72பார்த்தது
ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
ஓசூர் அடுத்த பாகனூர் அருகே நாகண்ணா ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹரீஸ் மற்றும் தர்ஷன் என்று தெரியவந்துள்ளது. ஏரியில் மூழ்கிய 3 பேரில் இவர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் ரிதிஷ் என்பவரை அங்கிருந்த பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சமீப நாட்களில் ஏரியில் குளிக்கச் செல்லும் மாணவர்கள் உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி