100 ஆண்டை நிறைவு செய்த பள்ளி.! படிக்க ஆள் இல்லை.!

58பார்த்தது
100 ஆண்டை நிறைவு செய்த பள்ளி.! படிக்க ஆள் இல்லை.!
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அணைக்கட்டு கிராம பகுதியில் அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது. 1924-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில், படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து, இந்த கல்வியாண்டில் முழுமையாக மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக மாறியது. எனவே இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளார். கிராம மக்களும் குழந்தைகளை அரசு பள்ளிகள் சேர்க்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி