கர்நாடக மாநில சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 18 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து சபாநாயகர் யூ.டி.காதர் உத்தரவிட்டுள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பின் சட்டமன்றம் தொடங்கியபோது, முஸ்லிம் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.