நாகையில் 14 இலங்கை மீனவர்கள் கைது

65பார்த்தது
நாகையில் 14 இலங்கை மீனவர்கள் கைது
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகளும் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்காமல் இருந்து வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடற்படையினர் இன்று (மே 16) கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த 5 நாட்டுப் படகையும் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து, கைதான இலங்கை மீனவர்கள் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி