உலகின் கூர்மையான மற்றும் அழியாதது என்று வர்ணிக்கப்படும் பண்டைய பிரெஞ்சு வாள் காணாமல் போயுள்ளது. ரோகமடோர் நகரில், 100 அடி உயரப் பாறாங்கல்லில் பாதி பதிக்கப்பட்ட 1,300 ஆண்டுகள் பழமையான வாள் திருடப்பட்டதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். தற்போது வாள் காணாமல் போனதால், தங்கள் தலைவிதி எப்படி மாறுமோ என அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்த வாள் ஆனது அங்குள்ள மக்களின் அதிர்ஷ்டமாக பார்க்கப்பட்டு வந்துள்ளது.