கரூர் மாவட்டம் புலியூர் பகுதியில் கடந்த 27ஆம் தேதி, தென்னரசு (16) என்ற மாணவர் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் இருந்த புளியமரம் முறிந்து, மாணவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று மாணவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.