உத்திரப் பிரதேச மாநிலம் பத்யா கிராமத்தைச் சேர்ந்த பெண் குடியா தேவி (45). சம்பவத்தன்று, இந்த பெண்ணை முதியவர் மற்றும் பெண் உள்பட நான்கு பேர் சேர்ந்து கீழே தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அப்பெண், இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், என்ன காரணத்திற்காக தாக்கினர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது எப்போது நடந்த சம்பவம் என தெரியவில்லை தற்போது இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.