தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

78பார்த்தது
தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில், ‌எஸ்.சி.,- எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த, 18 முதல், 55 வயதுக்கு உட்பட்டவர்கள் பயன்பெறலாம். குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.‌ அதன்படி, இத்திட்டத்தில், தகுதியுள்ள முதலீட்டுக்கு, 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். மானிய உச்சவரம்பு என்பது, 1.50 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச முதலீடாக, 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜாதிச்சான்று, இயந்திர தளவாடங்களின் விலைப்பட்டியல், பாஸ்போர்ட் அளவு போட்டோ, வாடகை ஒப்பந்த பத்திரம், திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி