நீட் தேர்வில் முறைகேடு - ரூ.10 லட்சம் பேரம்

56பார்த்தது
நீட் தேர்வில் முறைகேடு - ரூ.10 லட்சம் பேரம்
நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில், குஜராத் மாநிலம் பன்ச் மகால் மாவட்டத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தேர்வு முடிந்த பிறகு குறிப்பிட்ட சில மாணவர்களின் தேர்வுத் தாள்களை தானே நிரப்பி அனுப்புவதாக தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். இதற்காக அவர் ரூ.10 லட்சம் பேரம் பேசி ரூ.7 லட்சம் முன்பணம் பெற்றதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். முன்னதாக வினாத்தாள் ரூ.20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.