அப்பொழுது மன்சூர் அலிகான் வந்த வாகனத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் வேகமாக வந்து பிரச்சார வாகனத்தை வழி மறித்து நிறுத்தி வாகனத்தை சோதனை செய்ய முற்பட்டனர். அப்போது வாகனத்தில் இருந்த மன்சூர் அலிகான் கள்ளக் கடத்தல் கடத்துபவர்கள் காரை நிறுத்துவது போல் நிறுத்துகிறீர்கள், வந்து இருப்பவர்கள் முறையான தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகளா இல்லை போலியானவர்களா என்று பாருங்கள், என்னை சோதனை செய்வது போல திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை சென்று சோதனை செய்யுங்கள் பார்க்கலாம் என்றும் வந்திருப்பவர்களை புகைப்படம் எடுங்கள் என்றும் தெரிவித்தார்.
உடனே தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் மன்சூர் அலிகான் பரப்புரை மேற்கொண்ட வாகனத்தை புகைப்படம் எடுத்து அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.