சாமிதரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கிய பாமக வேட்பாளர்.

59பார்த்தது
தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில்
பேருந்து நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட், பஜார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முழுவதுமாக மக்களை சந்தித்து நடந்து சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்குகளை சேகரித்தார்.
முன்னதாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வள்ளிமலை சுவாமி சுப்ரமணிய முருகப்பெருமானை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் வேட்பாளர் பாமக வேட்பாளர் பாலு பொதுமக்கள் மத்தியில் பேசுகையில்
நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் எனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் உங்களை அன்போடு பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன். இந்த வள்ளிமலை பகுதியில் வசித்து கொண்டிருக்க கூடிய. தாய்மார்கள் வணிகப் பெருமக்கள் இந்த கோயிலை நிர்வாகம் செய்து கொண்டிருக்க கூடிய பெரியவர்கள் சார்ந்தவர்களுக்கு என்னது அன்பான வேண்டுகோள். என்னை இந்த தொகுதினுடைய நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற செய்தால். புகழ் பெற்ற ஒரு புனித தளமாக இதை நான் மாற்றிக் காட்டுவேன் என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி