அப்பொழுது ராம்ராஜ்க்கும் மற்ற நான்கு பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் அவர்கள் கத்தியால் ராம்ராஜை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே ராம்ராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
இது பற்றி தகவல் அறிந்து லத்தேரி போலீசார் ராமராஜை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆர்தீஸ், விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.