அணை விரைவாக கட்டி முடிக்கப்படும் திமுக வேட்பாளர் பேச்சு

52பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம்


*பத்தலப்பல்லி அணை விரைவாக கட்டி முடிக்கப்படும்*

*பத்தலபல்லியில் சமுதாயக்கூடம் கட்டித் தரப்படும்*

*பத்தலபல்லி ஆற்றில் தரைப்பாலம் கட்டித் தரப்படும் வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்குறுதி*

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு சாக்கர் பத்தலபல்லி உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

அப்பொழுது பத்திரப்பல்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் அங்கு பேசிய வேட்பாளர் கதிர் ஆனந்த் கடந்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதாகவும் அடுத்து மோடி ஆட்சி அமைந்தால் இன்னும் விலைவாசி கடுமையாக உயரும் எனவும் இதனால் பொதுமக்கள் ஏற்கனவே பாதிபேர் கடன்காரர்களாக இருப்பதாகவும் மேலும் மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் கஜானா காலி ஆகிவிடும் எனவும்

மேலும் இந்தப் பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான பத்தலப்பல்லி அணையை விரைவாக கட்டி முடிக்கப்படும் இந்த பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தேர்தல் முடிந்தவுடன் சமுதாயக்கூடம் கட்டி தரப்படும் மேலும் பத்தலபல்லி ஆற்றில் தரைப்பாலம் அமைத்து தரப்படும் என கதிர் ஆனந்த் வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி