இதனால் சந்தேகம் அடைந்த மணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வீட்டுக்குள் இருந்த செல்போனை எடுக்க சென்றார். இந்த நேரத்தில் அவர் வீட்டில் வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சம் பணத்தை மூன்று பேரும் எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து மணி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் திருட்டு ஈடுபட்டது வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த கணபதி, கே.வி. குப்பத்தை சேர்ந்த மோனிஷா, கலவையை சேர்ந்த மோகன் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் காட்பாடி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 45 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.