வேலூரில் திமுக கவுன்சிலிடமிருந்து 56 ஆயிரம் பறிமுதல்.

58பார்த்தது
வேலூர் மாவட்டம்.

வேலூரில் திமுக கவுன்சிலிடமிருந்து 56 ஆயிரம் பறிமுதல். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பு.

வேலூர் மாநகருக்குட்பட்ட கொசப்பேட்டை பகுதியில் பணம் விநியோகிப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில் வேலூர் மாநகராட்சி 39-வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயகுமார் என்பவர் 56 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. இதற்க்கான உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் 56 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா அவர்களிடம் ஒப்படைத்தனர். இது கோவில் நிகழ்ச்சி தொடர்பான வசூல் பணம் என திமுக கவுன்சிலர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி