பிரச்சனையை முடித்துக்கொண்ட காவலர் - நடத்துனர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் பயணம் செய்த காவலர் டிக்கெட் எடுக்க மறுத்ததாக கூறப்பட்டு வீடியோ ஒன்று வைரலான நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அரசு பேருந்துகளை ஆங்காங்கே மடக்கிய காவலர்கள் பல காரணங்களை சொல்லி அபராதம் விதித்து வந்தனர். இந்நிலையில் அந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டுள்ள காவலர் ஆறுமுகபாண்டி மற்றும் நடத்துனர் ஆகியோர் நேரில் சந்தித்து கை குலுக்கி கட்டிப்பிடித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் வருத்தம் தெரிவித்துக்கொண்டு சமாதானம் ஆகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி