ஜெயக்குமார் வழக்கு; குடும்பத்தினர் சிபிசிஐடி அலுவலகம் வருகை

60பார்த்தது
ஜெயக்குமார் வழக்கு; குடும்பத்தினர் சிபிசிஐடி அலுவலகம் வருகை
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் சந்தேகத்திற்கு இடமான முறையில் பாதி உடல் எரிந்த நிலையில்,கடந்த 4ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிசிஐடி ஆய்வாளர் உலகராணி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். நேற்று சிபிசிஐடி எஸ்பி முத்தரசியும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த நிலையில் இன்று (மே 25) நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெயக்குமாரின் குடும்பத்தினர் விசாரணைக்கு வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி