மதுபானம் அருந்தியவர் மர்ம மரணம்

53பார்த்தது
மதுபானம் அருந்தியவர் மர்ம மரணம்
சீர்காழி அருகே வருஷபந்து கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். கடந்த 19ம் தேதி இரவு அரசு மதுபானக் கடையில், இவரும், இவரது மைத்துனர் மணிகண்டன் என்பவரும் மதுபானம் வாங்கி குதித்துள்ளனர். பின்னர் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து அவரது உறவினர்கள் இருவருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த கணேஷ், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி