பாலியல் புகாரில் கோவில் அர்ச்சகர் கைது!

பாலியல் வழக்கில் சிக்கிய, சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். கோவிலுக்கு சாமி கும்பிட வந்த தன்னை காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாகக் கூறி தன்னிடம் அர்ச்சகர் அத்துமீறியதாகவும், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் மீது, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், இன்று (மே 28) கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி