இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

70பார்த்தது
சமீபகாலமாக நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று (மே 27) டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் டெல்லி விமான நிலையத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டது. உடனே விமானத்தில் இருந்த பயணிகள் பதறியடித்துக் கொண்டும், சிலர் விமான அவசர கால ஜன்னல் வழியாகவும் அங்கிருந்து இறங்கி ஓடினர். விமான பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் விமானத்தை ஆய்வு செய்தன. அதில் வெடிகுண்டு ஏதும் கண்டெடுக்கப்படவில்லை.

இதனிடையே சென்னை விமான நிலையத்திற்கும் சமீபத்தில் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி