கள்ளக்காதலியையும், மகனையும் கொன்ற கொடூரம்

15568பார்த்தது
கள்ளக்காதலியையும், மகனையும் கொன்ற கொடூரம்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஃபலாசியா பகுதியில் ஏப்ரல் 17ஆம் தேதி நடந்த கொடூர சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேவிலால் என்ற ஒப்பந்ததாரரின் மனைவி பாவனா. இந்த நிலையில், கணவர் இறந்த பிறகு, சீதா என்ற பெண், தேவிலாலிடம் வேலை செய்து வந்தார். தேவிலாலுக்கு சீதாவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தனது மனைவி பாவனாவுக்கு தெரியவந்ததை அடுத்து, மனைவி பாவனா, சீதாவை கொல்ல வேண்டும் என கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து சீதாவை கொல்ல திட்டமிட்டுள்ளனர். மனைவியின் விருப்பப்படி சீதாவை தேவிலால் கடந்த மாதம் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார்.

அதே போல், தேவிலால் ஒரு வருடத்திற்கு முன்பு சீதாவின் 4 வயது மகனையும் அடித்துக் கொன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சீதாவை கொன்ற ஒரு மாதத்திற்கு பிறகு போலீசார் குற்றவாளியை தற்போது கைது செய்துள்ளனர்.