பிரபல ரவுடி கத்தியால் சரமாரி வெட்டிக் கொலை

20778பார்த்தது
பிரபல ரவுடி கத்தியால் சரமாரி வெட்டிக் கொலை
சென்னை வில்லிவாக்கத்தில் நேற்றிரவு (மே 27) மதுபோதையில் இருந்த பிரபல ரவுடியை 2 பைக்குகளில் வந்த மர்ம கும்பல் சரமாரி வெட்டிக் கொலை செய்தது. அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரவுடி உதயகுமார் (35). இவர் மீது வில்லிவாக்கம், ஐசிஎப் காவல் நிலையங்களில் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்றிரவு வில்லிவாக்கம், கம்மவார் நாயுடு தெரு அருகே நண்பர்களுடன் உதயகுமார் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, 2 பைக்குகளில் மர்ம கும்பல் வந்தது. இதை பார்த்ததும் உதயகுமாரின் நண்பர்கள் தப்பியோடினர்.

அந்த கும்பல் உதயகுமாரை சுற்றி வளைத்து, கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். தகவலறிந்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உயிருக்கு போராடிய உதயகுமாரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உதயகுமார் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி