உத்தரகாண்ட் மாநிலம் பித்தோர்கர் பகுதியில் இன்று (மே 28) காலை 6.43 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை எனத் தெரிகிறது. நிலநடுக்கம் காரணமாக லேசான அளவில் பூமி அதிர்ந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இது பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.