அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

54பார்த்தது
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் வடமேற்கு மற்றும் மேற்கு திசை காற்று நிலவுகிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று (மே 28) காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல், தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி