பாலியல் வழக்கு - ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

பாலியல் வழக்கு மற்றும் பெண் கடத்தல் வழக்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா கைது செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, ஜாமீன் வழங்க கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்த விசாரணையில், பிணைத் தொகை ரூ.5 லட்சம் செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், பணம் செலுத்திய ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி