‘ஜெயக்குமார் கொலை என முடிவு செய்யவில்லை’ - ஐ.ஜி கண்ணன்

80பார்த்தது
‘ஜெயக்குமார் கொலை என முடிவு செய்யவில்லை’ - ஐ.ஜி கண்ணன்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் எரிந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் கொல்லப்பட்டாரா என இதுவரை முடிவு செய்யவில்லை. ஜெயக்குமார் விவகாரத்தில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். ஜெயக்குமார் மரண விவகாரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை நடத்தப்படும்” என தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி