"நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும்"

நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ஆர்.கே.சவுத்ரி, மன்னர்தான் கையில் செங்கோலுடன் நீதி பரிபாலனம் செய்வார், நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு அருகே செங்கோலை வைப்பது ஏற்புடையதல்ல என்றும் செங்கோலுக்கு பதிலாக அரசியலமைப்பின் மாதிரியை வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி