2-வது திருமணம்.. போலீஸ்காரர் கைது

63பார்த்தது
2-வது திருமணம்.. போலீஸ்காரர் கைது
கன்னியாகுமரி: நித்திரவிளை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (26) என்பவருக்கும் நேற்று கிராத்தூர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது. ராஜேஷ் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அந்த திருமண பெண்ணின் உறவினரான மற்றொரு பெண் போலீஸ், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு புதுமண தம்பதிகளை படம் எடுத்து காவலர் வாட்சப் குரூப்பில் பதிவிட்டார்.

அப்போது அந்த குரூப்பில் ராஜேஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாக கமெண்ட் வந்தது. உடனே அவர் திருமண பெண் வீட்டிற்கு தகவல் கொடுத்தார். அப்போது பெண் வீட்டார் ராஜேஷை வெளியே போக விடாமல் சுற்றி வளைத்து, நித்திரவிளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் நடத்திய விசரணையில், இவருக்கு திருமணமாகி மனைவி காவலர் குடியிருப்பில் இருப்பது தெரியவந்தது. பெற்றோர் இறந்து விட்டார்கள், உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறி ராஜேஷ் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் இவரது நண்பர்கள் 5 பேர் தலைமறைவாகி விட்டனர். போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி