தலைக்கு டை அடித்த பெண் பரிதாப பலி

71பார்த்தது
தலைக்கு டை அடித்த பெண் பரிதாப பலி
கரூர்: கிருஷ்ணராயபுரம் அடுத்த எழுதியாம் பட்டியைச் சேர்ந்தவர் விஜயா (44). இவர் மேட்டு திருக்காம்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று வருடமாக தலைக்கு டை போட்டு சேராமல் தலையில் புண்ணாகி அதன்பிறகு தலைவலி ஏற்பட்டதாகவும் அதற்கு மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு காட்டூர் சாலையில் திடீரென விஜயா மயங்கி இருந்துள்ளார்.

அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி