தாயை சுத்தியலால் தாக்கிய மகன் தீக்குளித்து தற்கொலை

50பார்த்தது
தாயை சுத்தியலால் தாக்கிய மகன் தீக்குளித்து தற்கொலை
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி அம்சவேணி (64). இவர்களது மகன் கார்த்திக் (42). கார்த்திக் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். பல்வேறு தொழில்களுக்கு தரகராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் மது போதையில் வீட்டில் தாய் அம்சவேணியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, அம்சவேணி பணம் கொடுக்காததால் அவரை சுத்தியலால் தலையில் தாக்கினார். இதில், அம்சவேணி படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இந்நிலையில், போதை தெளிந்த பின்னர் தனது தாயை தாக்கிய வேதனையில் கார்த்திக் தவித்தார். விரக்தியில் அவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில், உடல் கருகிய அவர் இறந்தார். தீ பரவியதால் வீட்டில் உள்ள பொருட்களும் எரிந்து நாசமானது.

தொடர்புடைய செய்தி