பயமா ஸ்டாலின்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

67பார்த்தது
பயமா ஸ்டாலின்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று (ஜூன் 27) உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இபிஎஸ் போட்ட எக்ஸ் பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எனது தலைமையிலான கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் விடியா திமுக முதல்வர் தயங்குவது ஏன்?

கள்ளச்சாராய மரணங்கள் 60-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்? #பயமா_ஸ்டாலின்? கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்!.” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி