அப்போது மீன் குஞ்சுகள் உயிருடன் இருந்துள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகையில், சில நாட்களாகவே பேரூராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரில் மீன் குஞ்சுகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே குடிக்கப் பயன்படுத்த முடியாத அவல் நிலை உள்ளது என அதிர்ச்சி தெரிவித்தனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, திருவாடானை, தினையத்தூர், காடங்குடி பகுதிகளில் கண்மாய் ஓரம் வழியாக வரும் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கண்மாய் பகுதியில் உள்ள நீர் உள்ளே புகுந்து விடுவதால் குடிநீரில் மீன் குஞ்சுகள் புகுந்து வந்திருக்கலாம். அதை அடைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
டெல்லி அணிக்கு 206 ரன்கள் இலக்கு