தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி அஸ்தி கடலில் கரைப்பு

மத்திய அரசுக்கு எதிராக தில்லி அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது‌ கடந்த பிப். 21-ஆம் தேதி ஸுப்கரண்சிங்மாண் என்ற விவசாயி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைஅடுத்து அனைத்து விவசாயிகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது அஸ்தி கொண்ட கலசம் யாத்திரையாக நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. இதில் காரைக்காலுக்கு அஸ்தி கொண்டு வரப்பட்டு மண்டபத்தூர் கிராம கடலில் கரைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி