தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு

60பார்த்தது
தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு
புதுச்சேரியில் பாஜக காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து நேர்மையாக தேர்தலை சந்திக்காததால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளர் பேட்டி அளித்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தன் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட சின்ன வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அதில் புதுச்சேரியில் அதிமுக சார்பில் போட்டியிடும்
நான் வாக்குக்கு பணம் கொடுக்காமல் ஜனநாயகத்தை மதித்து இந்த தேர்தலை சந்திக்கின்றேன். ஆனால் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாக அதிமுக வேட்பாளர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து இரும்பெரும் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் கொடுத்தேன், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பேன் என்றும் தேர்தல் நேர்மையாக நடைபெறாததால்
இந்த தேர்தலையே புறக்கணிக்கின்றேன். ஆகவே இந்த தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி