மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தார்மீக தோல்விக்குப் பிறகும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆணவம் போகவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், “பிரதமர் மோடி இன்று வழக்கத்தை விட நீண்ட உரை நிகழ்த்தினார். பல முக்கியமான விஷயங்கள் குறித்து மோடி ஏதாவது பேசுவார் என்று நாடு எதிர்பார்த்தது. நீட் வினாத்தாள் கசிவு, ரயில் விபத்து, பங்குச்சந்தை ஊழல் என்று எதைப்பத்தியும் பேசவில்லை. தெளிவான தார்மீக மற்றும் அரசியல் தோல்விக்குப் பிறகும் அவரிடம் ஆணவம் அப்படியே இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.