மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மீது மூன்று பிரிவுகளில் மயிலாடுதுறை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நேற்று இரவு கேக் வெட்டி, பிரியாணி வைத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் மீது கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி அளித்த புகாரின் பேரில் இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.