ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு இலவச உணவு

61பார்த்தது
ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு இலவச உணவு
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி மனிஷா ஆகியோர் சாலை ஓரத்தில் உணவகம் நடத்தி வருகின்றனர். அவர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர். மேலும், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதற்கு காரணமாக பார்க்கப்படுவது ஒருமுறை கார்த்திகேயன் விபத்துக்குள்ளானார். ஆம்புலன்ஸ் டிரைவர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உயிரைக் காப்பாற்றினார். அன்று முதல் அந்த தொழிலை மதித்து வந்த கார்த்திகேயன் அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்தி