தனுஷ் பட பாணியில் மாணவி தற்கொலை

64646பார்த்தது
தனுஷ் பட பாணியில் மாணவி தற்கொலை
சென்னை மயிலாப்பூர் அருகே உள்ள முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் நாகலட்சுமி. 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரது மகள் ஜனனி,பெண்கள் மேல்நிலை பள்ளி ஒன்றில் +2 படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது ஜனனி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மாணவியின் அறையில் இருந்த கடிதத்தில், எனக்கு தற்போதெல்லாம் 3 படத்தில் வருவது போல கனவு வருது. மேலும் தூக்குபோட்டு கொள்வதுபோல கனவு வருது. எனவே நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என எழுதி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி