சென்னை மயிலாப்பூர் அருகே உள்ள முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் நாகலட்சுமி. 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரது மகள் ஜனனி,பெண்கள் மேல்நிலை பள்ளி ஒன்றில் +2 படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது ஜனனி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மாணவியின் அறையில் இருந்த கடிதத்தில், எனக்கு தற்போதெல்லாம் 3 படத்தில் வருவது போல கனவு வருது. மேலும் தூக்குபோட்டு கொள்வதுபோல கனவு வருது. எனவே நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என எழுதி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.