ஆகஸ்டில் மோடி ஆட்சி கவிழும் - லாலு பிரசாத் யாதவ்

ஆகஸ்டில் மோடி ஆட்சி கவிழும் என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கணித்துள்ளார். நிறுவன தின விழாவில் தொண்டர்கள் மத்தியில் பேசிய லாலு பிரசாத் யாதவ், “மோடி அரசு மிகவும் வலுவிழந்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். எதற்கும் தேர்தலுக்கு தயாராக இருங்கள். அதேபோல், பீகாரில் எப்போது வேண்டுமானாலும் சட்டசபை தேர்தல் வரலாம், இனி தேஜஸ்வி யாதவ் கட்சி தலைமையை ஏற்பார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி