தேன்கனிக்கோட்டை: மதுபாட்டில்கள் பறிமுதல் - பெண் உட்பட இருவர் தலைமறைவு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தில் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்தப் பகுதியில் உள்ள கௌரி (55) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 505 மதுபான பாட்டில்களை தேன்கனிக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான கௌவி மற்றும் அவரது மகன் ரஃபி(32) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி