இந்த நிலையில் நேற்று (ஜனவரி 21) மாலை கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று மார்த்தாண்டம் சந்திப்பு அருகே திடீரென பின்பக்க ஜாயின்ட் பேரிங் உடைந்து நின்றது. இதை கண்ட டிரைவர் லாரியை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தினார். ஆனால் பாலத்தின் அடியில் குறுகிய சாலை என்பதால் அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து பழுது சரி செய்யப்பட்டு லாரி புறப்பட்டு சென்றது. இதன் பின்னரே வாகன போக்குவரத்து சீரானது. மார்த்தாண்டம் நகர பகுதிக்குள் கனரக லாரிகளை நாள் முழுவதும் அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு