"இது பெரியார் மண் என்பது நிரூபணம் ஆகியுள்ளது" - கி வீரமணி

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு திராவிட கழகத் தலைவர் கி வீரமணி வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “மீண்டும் இது பெரியார் மண்தான் என்பதையும், “திராவிடம் வெல்லும் - அதை வரலாறு சொல்லும்” என்பதையும் நிரூபித்துவிட்டார் நமது ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவரது கடும் உழைப்பும், திட்டமிட்ட வியூகமும் தான் தந்த வெற்றி கனிகள் இவை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி