என்னை தோற்கடிக்க வேலை பார்த்தனர்: தோல்விக்கு பின் ஓ.பி.எஸ்

1091பார்த்தது
என்னை தோற்கடிக்க வேலை பார்த்தனர்: தோல்விக்கு பின் ஓ.பி.எஸ்
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ என் பெயரில் பல சுயேட்சைகளை நிறுத்தி என்னை தோற்கடிக்க சிலர் முயன்ற நிலையில் என் பெயரையும், பலாப்பழம் சின்னத்தையும் கண்டறிந்து எனக்கு லட்சக்கணக்கான வாக்குகளை கொடுத்த ராமநாதபுரம் மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் அமைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி