நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில்
பாஜக மாநில தலைவர்
அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எங்கள் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்துள்ள அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் நலனுக்கான குரலாய், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குரலும், தமிழக பாஜகவின் குரலும் தொடர்ந்து ஒலிக்கும். நமது மக்கள் நிச்சயம் அங்கீகாரம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது'' என பதிவிட்டுள்ளார்.