ஐயப்ப பக்தர்களுக்கு விரைவில் காப்பீடு திட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த், "சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் ஐய்யப்ப பக்தர்களிடம் காப்பீடுக்காக ஒருவருக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி